districts

img

எழுத்துகள் மங்கிப் போன அறிவிப்புப் பலகை

தஞ்சாவூர், நவ.1 - தெளிவான விளம்பரப் பலகை இல்லாத தால், தஞ்சாவூர் பாஸ்போர்ட் அலுவல கத்திற்கு புதிதாக வரும் பொதுமக்கள் இடம் தெரியாமல் அவதிப்படுகின்றனர்.  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை யில், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட்  அலுவலக கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையம் உள்ளது. இந்த  மையத்தின் கீழ் தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் தினசரி புதிய பாஸ்போர்ட் எடுக்கவும், பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும், அது தொடர்புடைய பல்வேறு சேவைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.  பாஸ்போர்ட் சேவை மைய அலுவலகம் மருத்துவக் கல்லூரி சாலையில், குமரன் தியேட்டர் அருகில், கருப்ஸ் டவர் என்ற  தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில்  இயங்கி வருகிறது. கட்டிடத்தின் முகப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தஞ்சாவூர் மண்டல அலுவலகம் செயல் பட்டு வருகிறது. முதல் தளத்தில் பாஸ்போர்ட்  சேவை மையம் இயங்கி வருகிறது.  அந்த வளாகத்தின் இடதுபுறத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தை அடையா ளம் காட்டும் வகையில் விளம்பரத் தட்டி  வைக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தின் முகப்பில் அவ்வாறு ஏதும் விளம்பரத் தட்டி வைக்கப்படவில்லை. முகப்பில் வைக்கப் பட்டுள்ள விளம்பரத் தட்டியில் உள்ள எழுத்து கள் வெயில், மழையால் மங்கிப் போய் கண்ணுக்குப் புலப்படாத வகையில் உள்ளன. இதனால் வெளியூர்கள், வெளி மாவட்டங் களில் இருந்து புதிதாக பாஸ்போர்ட் அலு வலகம் வரும் நபர்கள், இடம் தெரியாமல் அலையும் நிலை உள்ளது. எனவே, பாஸ்போர்ட்  சேவை மைய அலுவலகம் நன்றாக தெரி யும்படி, தெளிவான விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.