அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு தருமத்துப்பட்டியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘இப்பகுதி யில் மலைவாழ் விவசாயி கள் அதிகம் உள்ளனர். அடிக்கடி காட்டு விலங்கு களான யானை மற்றும் எரு மைகளால் பயிர்கள் சேத மடைந்து விவசாயிகள் பாதிப் படையும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. முதல்கட்டமாக விவ சாயிகள் நலன் காக்க மலைக் கிராமங்களில் சோலார் மின்வேலி அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும். இது தவிர பயிர்கள் சேதமடைந் தால் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கிடைக்க நட வடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியை சேர்ந்த வேளாண் பெருமக்கள் தங்களுக்கு தங்களுக்கு கூட்டுறவுத்துறை மூலம் கால்நடைகள் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டு மென்று மனு கொடுத் துள்ளார்கள்.விரைவில் தேர்தல் முடிந்தவுடன் கூட்டு றவு சங்கங்கள் மூலம் அவர்களுக்கு கால்நடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும். பாஜகவை ஒட்டு மொத்தமாக தமிழகத்தை விட்டு விரட்ட மக்கள் தயாராகி விட்டார்கள்’’ என்று கூறினார். முன்னதாக தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரிய சாமி, வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்திற்கு தரு மத்துப்பட்டி கிராம மக்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.