districts

img

ஆக.31 இல் சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட மாநாடு: வரவேற்பு குழு அமைப்பு

தென்காசி , ஆக. 4 தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் ஞாயிறு  அன்று குத்துக்கல் வலசையில் மீராஉசேன் தலைமையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில துணைத்தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ், அகமதுஉசேன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் சிஐடியூ மாவட்ட தலைவர் அயூப்கான்   ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் சலீம் முகம்மது மீரான், பீடித்தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குருசாமி, மாதர் சங்க நிர்வாகி பேராசிரியர்  சங்கரி, ஆயிஷா, நிஜாம், சேட், வாசுதேவநல்லூர் ராஜ் உள்ளிட்ட. திரளானவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆகஸ்டு 31 ல்  தென்காசியில் சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தென்காசி மாவட்ட முதல் மாநாட்டை சிறப்பாக நடத்திட முடிவு செய்யப்பட்டது.  மாநாட்டை சிறப்பாக நடத்திட  தலைவராக  பேராசிரியர் சங்கரி , செயலாளராக புளியங்குடி நிஜாம், பொருளாளராக வடகரை மீராக்கனி ஆகியோர் உள்ளிட்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது.வரவேற்பு குழு செயலாளர் நிஜாம் நன்றி கூறினார்.