districts

img

மக்கள் நாவலர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கு ‘இலக்கியச் சுடர்’ விருது வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- மக்கள் நாவலர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கு இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

‘படிப்போம் பகிர்வோம்’ இலக்கிய அமைப்பின் 10 ஆம் ஆண்டு விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஞாயிறன்று திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கத்தில் நடந்தது. 

விழாவிற்கு, படிப்போம் பகிர்வோம் அமைப்பின் பொருளாளர் புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் தேவராஜ் வரவேற்றார். லால்குடி ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

இலக்கிய அமைப்பின் துணைத் தலைவர் நல்லாசிரியர் தமிழரசி, முனைவர் சித்ரா, செயலாளர் மனுராஜ், இணைச் செயலாளர் சந்திரசேகரன், துணைச் செயலாளர்கள் ராமலிங்கம், திருநாவுக்கரசு, அமைப்பு செயலாளர்கள் சரண்குமார், முகமது சர்புதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சுபம் குழும உரிமையாளர் சுந்தர்ராஜ், மக்கள் நாவலர் மதுக்கூர் இராமலிங்கத்திற்கு “இலக்கிய சுடர்” விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். விருதைப் பெற்றுக் கொண்டு, மக்கள் நாவலர் மதுக்கூர் இராமலிங்கம் ஏற்புரை ஆற்றினார். 

எல்ஐசி வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.