தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது தஞ்சாவூர் வட்டம் கண்டிதம்பட்டு கிராமத்தை சார்ந்த இருதயமேரி மண்சுவர் விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது கணவர் பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.