districts

img

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடை பெற்றது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமிருந்து பல்வேறு கோரிக்கை அடங்கிய 565 மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டார். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாதம் ரூ.2.000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 5 நபர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணை வழங்கினார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 நபர்களுக்கு ரூ.7.500 மதிப்பீட்டில் ஒளிரும் மடக்கு குச்சியையும் வழங்கினார்.