புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தாட்கோ சார்பில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலம் இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25,000 மதிப்பிலான காசோலை, தூய்மைப் பணியாளரின் மனைவி கவிதாவிற்கு வழங்கினார்.