districts

img

எடக்குடி ஊராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்

மயிலாடுதுறை, ஜூன் 10-

        மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகேயுள்ள எடக்குடி ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாது காப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் மக்கள் குறை தீர் முகாம் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

      முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் வெ.விஜயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயா தங்கமணி  முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் துறை  தனி  வருவாய் அலுவலர் மரிய ஜோசப்ராஜ்  வரவேற்றார்.  

    முகாமில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம்,  பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன்  எண் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் மீது தீர்வு  காணப்பட்டது.