districts

img

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், செப்.27 -  சிபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக, ஒன்றிய அரசால் கொண்டு  வரப்பட்டுள்ள ஒருங்கி ணைந்த (யுபிஎஸ்) ஓய்வூதி யத் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கிட வேண்டும் என வலியுறுத்தி, அனைத்துத் துறை ஓய்வூ தியர் சங்கத்தினர் நாடு முழு வதும் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் வட்டக் கிளை சார்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வட்டக் கிளைத் தலை வர் த.சந்திரமோகன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் இரா.அண்ணா துரை கோரிக்கை விளக்க வுரையாற்றினார். துணைத்  தலைவர் க.கிருஷ்ண மூர்த்தி, வட்ட செயற்குழு உறுப்பினர் சிவ.ரவிச்சந்தி ரன், மாவட்ட இணைச் செய லாளர் சி.பிச்சைமுத்து ஆகி யோர் விளக்க உரையாற்றி னர். மாவட்டச் செயலாளர் இரா.தமிழ்மணி ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் கோ.ஆனந்தராவ் நன்றி கூறினார். கும்பகோணம் கும்பகோணம் ரயிலடி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஒருங்கிணைப்பா ளர் ஆர்.ராஜகோபாலன் (டிஎன்ஜிபிஏ) தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் சொ.சண்முகம், கண்ணாமணி கண்டன முழக் கங்களை எழுப்பினர். சங்க  கும்பகோணம் வட்ட தலை வர் அ.துரைராஜ் வர வேற்றார். பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க பொறுப் பாளர் ஆர்.ஏ.பக்கிரிநாதன் துவக்க உரையாற்றினார். டிஆர்இயு பி.கோபால கிருஷ்ணன், ஆர்.தாமோ தரன் (போக்குவரத்து) வெங்கடேசன் (அரசு ஊழி யர் சங்கம்), கோ.மணி மாறன் (அரசு போக்கு வரத்து) ஆகியோர் கண்டன  உரையாற்றினர்.