districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஓய்வூதியர்கள் தர்ணா

திருச்சிராப்பள்ளி, செப்.19- ஓய்வு பெறும் ஊழியர் கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகையை ரயில்வே துறை மீண்டும் வழங்க வேண்டும்.நீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த பொதுவான சட்ட வழக்குக் கொள்கையை உருவாக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங் கிணைப்புக்குழு சார்பில் திருச்சியில் புதனன்று தர்ணா போராட்டம் நடை பெற்றது.  பி.எஸ்.என்.எல் திருச்சி  மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத் திற்கு  டி.என். ஐ.டி.பி.ஏ தங்க சுப்பிரமணியன் தலைமை வகித்தார். என்.சி.சி.பி.ஏ அகில இந்திய பொதுச் செய லாளர் ராகவேந்திரன் உரை யாற்றினார். ஏ.ஐ.பி.ஆர்.பி.ஏ சிவசுப்பிரமணியன், பி. எஸ்.என்.எல்.இ.யூ அஸ்லம் பாஷா, டி.ஆர்.பி.யூ வெங்க டேசன், ஆகியோர் பேசினர் முன்னதாக ஏ.ஐ.பி.டி. பி.ஏ  இளங்கோவன் வரவேற் றார். என்.சி.சி.பி. ஏ செயலா ளர் கோபல்சாமி நன்றி கூறி னார்.