districts

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்குக

திருச்சிராப்பள்ளி, ஜூன் 20 -

     ரயில்வே மருத்துவமனையின் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    திருச்சி பொன்மலை ஆர்மிகேட் அருகில் உள்ள ரயில்வே மருத்துவமனை 150 படுக்கை வசதிகளை கொண்டது. இங்கு  தினமும் சுமார் 600 பேர் புறநோயாளிகளாக வும், 100 பேர் உள்நோயாளிகளாகவும், சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ மனையின் தூய்மை பணியை ரயில்வே நிர்வாகம் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம்  செய்து வருகிறது. இங்கு பல வருடங்க ளாக 23 ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் தூய்மை தொழிலாளர்  களுக்கு வழங்க வேண்டிய நியாயமான தினக்கூலி ரூ. 616-க்கு பதிலாக, ரூ.300 மட்டுமே வழங்குகிறது. அதனையும் முழு மையாக வழங்காமல் தவணை முறையில் வழங்குகிறது. மே மாதம் சம்பளத்தை தற்  போதுவரை வழங்கவில்லை. மேலும் தூய்மை பணிக்கு தேவையான உபகர ணங்கள் மற்றும் பொருட்களை சரிவர  கொடுப்பதில்லை. இதனால் மருத்துவ மனையின் சுகாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.  

    எனவே இந்த விவகாரத்தில் ரயில்வே மருத்துவமனை நிர்வாகம் தலையிட்டு ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு, தூய்மைப் பணிக்கு தேவையான உப கரணங்கள் மற்றும் பொருட்களை முறை யாக வழங்க வேண்டும்.

    பணியாளர்களின் சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்  டும். தினக்கூலி ரூ.616 வழங்க வேண்டும்.  இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்ய  வேண்டும். மாதந்தோறும் சம்பளம் வழங்க  வேண்டும். தூய்மை பணிக்கான ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஒப்பந்த தொழி லாளர்கள் சங்கம் மற்றும் சிஐடியு திருச்சி  மாநகர் மாவட்டக் குழு சார்பில் பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு செவ்வா யன்று காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.

   போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் மாறன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்தி கேயன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் சரஸ்வதி, பகுதிச் செயலாளர் புவ னேஸ்வரி, டி.ஆர்.இ.யு உதவி பொதுச்செய லாளர்கள் சரவணன், ராஜா, பழனி, கோட்ட  தலைவர்கள் கரிகாலன், லெனின் உட்பட பலர் பேசினர். போராட்டத்தில் ரயில்வே மருத்துவமனை ஒப்பந்த தூய்மை தொழி லாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட னர்.