தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024- க்கான அனைத்து தொடர்பு அலு வலர்கள், தேர்தல் மேற்பார்வை அலுவலர் களுக்காக நியமிக்கப்பட்டுள்ள இணைப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு மற்றும் அறிவுரைகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-க்கு தேர்தல் பணியாற்ற உள்ள அனைத்து அலுவலர்கள் (நோடல் ஆபிசர்ஸ்) மேற் கொள்ள வேண்டிய பணிகளுக்கான முன்னேற் பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் ஆலோசனை வழங்கினார்.