districts

img

பரணி பார்க் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

கரூர், அக்.12 - கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு  முகாம் கரூர் காதப்பாறை குப்புச்சிபாளை யம் கிராமத்தில் செப்.29 முதல் அக்.5 வரை  நடைபெற்றது. செப்.29 அன்று நடைபெற்ற துவக்க விழா வில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் தாளா ளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார்.  செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை  வகித்தார். பரணி பார்க் கல்விக் குழும  முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிர மணியன் முகாமை துவக்கி வைத்து பேசி னார். தமிழக கேரம் சங்க மாநில பொதுச் செய லாளர், ‘அர்ஜூனா விருதாளர்’ மரிய இருத யம் வாழ்த்திப் பேசினார். பள்ளி முதல்வர் கே.சேகர் வரவேற்றார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.சரவணன் நன்றி கூறி னார். ஏழு நாட்கள் நடைபெற்ற நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாமில் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு பேரணி, ஆரோக்கிய வாழ்விற்கு சிறந்த உணவு முறை கள், டெங்கு விழிப்புணர்வு, யோகா மற்றும் புத்தகம் வாசித்தலின் முக்கியத்துவம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரம் நடுதல்  உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. அக்.5 அன்று கரூர் மாவட்ட மைய நூல கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் எல்.சுமதி, கரூர் மாவட்ட மைய நூலக அலு வலர் சிவக்குமார் உள்ளிட்டோர் மாணவர் களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.