districts

img

பரணி பார்க் பள்ளி மாணவி சாதனை

கரூர், மே 10 - கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 20 மாணவர்கள் 480-க்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாணவி எம்.எஸ்.சாதனா 493 மதிப்பெண்ணும், ஆர்.சாதனா 491 மதிப்பெண்ணும், எஸ்.டி.நேஹா 490 மதிப்பெண்ணும் பெற்று அபார சாதனை படைத்துள்ளனர்.  மேலும் கணிதத்தில் 12 மாணவர்களும், அறிவியலில் 2 மாணவர்களும், சமூக அறிவியலில் 1 மாணவரும் என மொத்தம் 15 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 23  மாணவர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 41 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 73 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 138 மாணவர்களும் பெற்றுள்ளனர். சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், பள்ளியின் முதல்வர் கே.சேகர், துணை முதல்வர் ஜி.நவீன்குமார், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர் வி.பானுப்பிரியா மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்கு பரணிபார்க் கல்விக் குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் சுபாஷினி அசோக்சங்கர் முன்னிலை வகித்தனர். சாதனை புரிந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.