districts

img

குறுவட்ட விளையாட்டு போட்டி: பொறையார் சர்மிளா பள்ளி சாம்பியன்

மயிலாடுதுறை, ஆக.14 -  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை நடத்திய விளையாட்டுப் போட்டிகள் காட்டுச்சேரி அரசு மினி விளை யாட்டரங்கில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்று, பொறையார் சர்மிளா காடஸ்  மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகப் புள்ளிகளுடன் தனியார் பள்ளி களில் முதலிடம் பிடித்தனர். ஆண்களுக்கான பல்வேறு தடகளப்  போட்டிகளில் 9 மாணவர்கள் ஒன்றுக்கு  மேற்பட்ட முதல் பரிசுகளும், 2 பேர்  இரண்டாம் பரிசும், 6 பேர் மூன்றாம் பரிசும் வென்றனர். பெண்களுக்கான தடகளப்  போட்டிகளில் ஹெர்ஷினி முதல் பரிசும், ஹரிணி இரண் டாம் பரிசும், ஹெர்ஷினி, கார்த்திகா ஆகியோர் மூன்றாம் பரிசுகளும் வென்றனர். பள்ளி யின் மேன்மேலோர் பிரிவு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.  மாணவர் முகமது அல்  அஸ்பர் தனிநபர் சாம்பிய னாக தேர்வு செய்யப்பட்டார். இப்பள்ளி ஒட்டுமொத்தப்புள்ளிகள் 102 பெற்று குறுவட்ட அளவில் தனியார் பள்ளிகளுள்  முதலிடம் பெற்றது. வெற்றி பெற்றவர்களில் 10 மாணவ, மாணவிகள் மாவட்டப் போட்டி களுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு பூம்புகார் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிவேதா எம்.முருகன்  பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். விளை யாட்டு வீரர்களையும், அவர்களுக்கு பயிற்று வித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி  முதல்வர் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.