தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கோபுராஜபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப் பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். கோபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன் வரவேற்றார். இதில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துச் செல்வன், பாபநாசம் தாசில்தார் செந்தில்குமார், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் கோவி.அய்யாராசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.