பழனி, மே 12- பழனி அடிவாரம் காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார் பில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சங் கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமையில், மாவட்டச் செயலாளர் பகத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளியன்று (10.05.24) திண் டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந் தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ‘‘திண் டுக்கல் மாவட்டம் பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக அடிவாரம் பகு தியில் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு அதற்கான எல்லைகளும் தீர்மானிக் கப்பட்டு கடந்த பல வரு டங்களாக அடிவாரம் காவல் நிலையம் செயல்பட்டு வரு கிறது. இந்த காவல் நிலை யத்தின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்களில் மாற் றுத்திறனாளிகளும் வய தானவர்களும் அடக்கம். இப்பகுதி மக்கள் அடிவாரம் காவல்நிலையத்தில் எளி தாக புகார் அளித்து அதற் கான தீர்வை கண்டுவந்தனர். இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி அடிவாரம் காவல் நிலையம் அமைந் துள்ள கிரிவீதியில் இரு சக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இத னால், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகப்பெரிய சிரமம் ஏற்பட் டுள்ளது. அடிவாரம் காவல் நிலை யத்தை சுற்றி பல்வேறு இடங் களில் தடுப்புகள் ஏற்படுத் தப்பட்டுள்ளதால் காவல் நிலையத்திற்கு நடந்துவந்து புகார் அளிக்க இயல வில்லை. எந்த மக்களை பாது காக்க காவல் நிலையம் அமைக்கப்பட்டதோ, அந்த மக்களுக்கு இக்காவல் நிலையம் பயன்படாத சூழ் நிலையை கடந்த சில மாதங்களாக உருவாக்கி யுள்ளது. எனவே, மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் உடனடியாக தலை யிட்டு அடிவாரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருகை தரும் மாற்றுத்திற னாளிகள் மற்றும் முதியோர் காவல் நிலையம் வரை வாக னங்களில் செல்ல அனு மதிக்க வேண்டும் என்றும் தவ றும் பட்சத்தில் அடிவாரம் காவல் நிலையத்தை பொது மக்கள் அனைவரும் அணு கும் வகையில் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.