நாகப்பட்டினம், நவ.12 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் “பொன்னி சித்திரக் கடல்” என்ற ஓவிய பயிற்சி மையத்தை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்ட மானது பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகை யில் மாணவர்களின் படைப்பாற்றல் திறமையை மேம்படுத்தும் விதமாக, அரசுப் பள்ளி மாணவர்களின் ஓவியத் திறனை மேம்படுத்த நாகப்பட்டினம், நீலா தெற்கு வீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில், அதன் சிறப்புத் தன்மை குறையாமல் அப்படியே புதுப்பித்து “பொன்னி சித்திரக் கடல்” என்ற ஓவிய பயிற்சி மையம் திறப்பு விழா கண்டது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி “பொன்னி சித்திரக் கூடத்தை” திறந்து வைத்தார். நாகை மாவட்ட ஆட்சி யர் ப.ஆகாஷ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர் லீனா சைமன், மாவட்டக் கல்வி தன்முனைப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதி.உதய குமார், மாவட்டக் கல்வித் தன்முனைப்புத் திட்ட ஆசிரிய தூதுவர்கள், ஓவிய பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாண வர்கள் கலந்து கொண்டனர். “பொன்னி சித்திரக் கடல்” ஓவிய பயிற்சி மையத்தின் மூலம் பள்ளி மாண வர்களுக்கு ஓவியக் கலையின் அனைத்து வகைமைகளும் முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். இம்மையமானது வார விடுமுறை நாட் களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் இயங்கும். ஓவியக்கலையில் சிறந்து விளங்கும் ஓவிய ஆசிரியர் களால் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் ஓவியக் கலை யில் சிறந்து விளங்கும் கலைஞர் களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும்.