மயிலாடுதுறை, ஜூலை 11- மயிலாடுதுறை மாவட்டம் , தரங்கம்பாடி யில் உள்ள சீகன்பால்கு அருங்காட்சிய கத்தில்( தமிழறிஞர் சீகன்பால்கு வாழ்ந்த வீடு) மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 ஓவியர்கள் வரைந்த ஓவிய கண்காட்சி புதனன்று துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த ஓவிய கண்காட்சியை பண்ரூட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் முத்துக்குமரன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீகன்பால்கு அருங்காட்சியக இயக்குநர் சாமுவேல் மனுவேல் கலந்துகொண்டு ஓவியர்களை வாழ்த்தி பேசினார். இந்த ஓவிய கண்காட்சியில ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியர் விக்னேஷ் என்பவர் சூரிய ஒளிக்கதிர்களை உருப்பெருக்கியால் குவித்து மரப்பலகை யில் நெருப்பை உருவாக்கி வரைந்த மகாத்மாகாந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்கள், தோனி, கோலி, ரோகித்ஷர்மா போன்ற கிரிக்கெட்வீரர்களின் ஓவியங்கள் மற்றும் முப்பரிமாண ஓவியம், தத்ரூப பெயிண்டிங் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஓவியங்களை காட்சிபடுத்தியிருந்தார். அதேபோல் பென்சில் ஓவியர் முத்துக்குமா ரின் சிறுசிறு கோடுகளால் வரையப்பட்ட மழைசாரல் போன்ற கோட்டு ஓவியங் கள், கைவினை கலைஞர் அட்சயாவின் கொட்டாங்குச்சியில் செய்யப்பட்ட கைவினைபொருட்கள், முட்டைஓடுகள் பல்பு பாட்டில்களில் வரையப்பட்ட ஓவி யங்கள், கனிமொழி என்ற ஓவியரால் வரையப்பட்ட கரிதூள் ஓவியம், புள்ளிக ளால் வரையப்பட்ட அப்துல்கலாமின் படம் மற்றும் 11ம் வகுப்பு அரசுபள்ளி மாணவி ஓவியக்கல்லூரி மாணவனின் தத்ரூப ஓவியங்கள், என 300க்கும் மேற்பட்ட ஓவியங்களை இந்த கண்காட்சி யில் காட்சிபடுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு கண்டு ரசித்து வருகின்றனர். தமிழ் நூல்களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றிய தமிழறிஞர் சீகன் பால்குவை நினைவு கூரும் வகையில் ஆசியாவின் முதல் சூரிய ஒளி ஓவியரான விக்னேஷ் சீகன் பால்கு வாழ்ந்த இல்லத்தின் எதிரே சூரிய ஒளி கதிர்களை பூதக் கண்ணாடி யில் குவித்து மரப்பலகையை எரித்து சீகன்பால்கு முகத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தினார். இதனை அங்கிருந்த மாணவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஓவிய கண்காட்சி குறித்து விக்னேஷ் மற்றும் ஓவியர்கள் கூறுகையில், நவீன உலகில் ஓவிய கலை தொய்வ டைந்து வருகிறது. இளைய தலைமுறையி னரிடையே ஓவியக்கலை மீதான ஆர்வத்தை அதிகமாக்கும் நோக்கத்தோடு இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள் ளோம். என்ன தான் டிஜிட்டல் முறையில் ஓவியங்களை வரைந்தாலும் கைகளால் வரையக்கூடிய ஓவியங்கள் தான் மனி தர்களை கவரக்கூடிய ஆற்றல் இருக்கி து. ஓவியங்களை பார்த்து ரசித்து ஆர்வத்து டன் பயிற்சிபெற விரும்புகிறவர்களுக்கு ஓவிய பயிற்சியளிக்கவும் தயாரக உள்ளோம் என்றனர்.