மயிலாடுதுறை, ஜூலை 21 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடியிலுள்ள சீகன்பால்கு அருங்காட்சி யகத்தில் தமிழறிஞர் பற்றிய சிறப்பு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த பிப்ரவரி மாதத்தில் தரங்கம்பாடி சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் “மிஷன் சீகன்பால்கு ஜெர்மன் ஓவிய கண் காட்சியை” நேரில் பார்வையிட்டு, சீகன்பால் குவின் வரலாற்றையும், அவரது தமிழ் தொண்டையும் அறிந்து கொண்ட மாணவர்களுக்கு, சீகன்பால்கு தரங்கம் பாடி வந்த ஜூலை 9 ஆம் நாளை நினைவு கூறும் வகையில், சீகன்பால்கு படத்தை ஓவியமாக வரைதல் போட்டி அருங்காட்சி யகம் சார்பில் நடத்தப்பட்டது. மாணவர்கள் வரைந்த ஓவியங்களை, சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் தற் போது ஓவிய கண்காட்சியை நடத்துகிற மயிலாடுதுறை மாவட்ட இளம் ஓவியர் கள் நடுவர்களாக செயல்பட்டு வெற்றியா ளர்களை தேர்வு செய்தனர். அதன்படி தரங்கம்பாடி தூய ஜான் துவக்கப்பள்ளி, புனித தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித தெரசா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பரிசு பெற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி அருங்காட்சியக இயக்குநர் டாக்டர்.சாமுவேல் மனுவேல் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் வணிகத்துறை பேராசிரியர் மரியலாசர் பங்கேற்று, போட்டியில் வென்றவர் களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்கி னார். தூய ஜான் துவக்கப் பள்ளி தலை மையாசிரியை அருட்சகோதரி ரொமென்னா, தரங்கை டேனிஷ் சங்கத்தின் துணைத் தலைவர் நூட் ஹெலஸ் ஆகியோர் உரை யாற்றினர். இயக்குநர் டாக்டர் சாமுவேல் மனுவேல் நன்றி கூறினார்.