districts

img

தஞ்சாவூரில் ஓவிய - சிற்பக் கலைக்காட்சி

தஞ்சாவூர், டிச.29 - தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (பழைய  மாவட்ட ஆட்சியரகத்தில்) ஓவிய - சிற்பக் கலைக்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின், தஞ்சாவூர் மண்டலக் கலை  பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் தஞ்சாவூர் மண்டலத்துக் குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,  மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களி லிருந்து ஓவிய, சிற்பக் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாரம்பரிய ஓவியம், தத்ரூப ஓவியம், நவீன ஓவியம் என 125-க்கும் அதிக மான ஓவியங்களும், பாரம்பரிய சிற்பங்கள்,  வெண்கல சிற்பங்கள், தத்ரூப சிற்பங்கள், நவீன சிற்பங்கள் என 25-க்கும் மேற்பட்ட சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சியை மாவட்ட சுற்றுலா அலுவலர் அ.சங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் த.செந்தில்குமார், தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறைத் தலைவர் செ.கற்பகம், மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் குழும ஒருங்கி ணைப்பாளர் எஸ்.முத்துகுமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில், சிறந்த ஓவிய-சிற்ப கலைப் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் 7 கலைஞர்களுக்கும், இரண்டாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதம் 7  கலைஞர்களுக்கும், மூன்றாவது பரிசாக ரூ. 2  ஆயிரம் வீதம் 7கலைஞர்களுக்கும் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் படவுள்ளது.