கரூர், அக்.27 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் கடவூர் வட்ட 8 ஆவது மாநாடு ரெட்டி யாப்பட்டியில் தோழர் சீத்தாராம் யெச்சூரி நினை வரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ராம சாமி தலைமை வகித்தார். மூத்த தலைவர் பிச்சை செங்கொடி ஏற்றி வைத்தார். வட்டக் குழு உறுப்பினர் தினேஷ் வரவேற்றார். கட்சி யின் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.பாலா மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி மாநாட்டை வாழ்த்தி பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கடவூர் வட்ட புதிய செயலாளராக பி. பழனிவேல் தேர்வு செய் யப்பட்டார். காவிரி ஆற்றில் மாயனூர் தடுப்பணையில் இருந்து உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து கடவூர் ஒன்றியத்தில் உள்ள முள்ளிப்பாடி, மாவத்தூர், உடையாபட்டி ஏரிகள், பொன் னனியாறு டேம் ஆகிய வற்றில் நிரப்ப வேண்டும். இதன்மூலம் பல ஆயிரம் விவசாயிகள் பயன் பெறு வர். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுவில் உள்ள கொசூர், தொண்ட மாங்கிணம், மத்தகிரி ஆகிய ஊராட்சிகளை பிரித்து கடவூர் ஊராட்சி ஒன்றிய குழுவுடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.