திருச்சிராப்பள்ளி, மார்ச் 9- வேலையை பறித்து, தொழில் அமைதி யை கெடுத்து, தொழிலாளர்கள் மத்தியில் மோதல் போக்கை உருவாக்கும் காண்ட் ராக்டர் பிராங்க்ளின் மீது உரிய நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார் பில் வியாழனன்று பொன்மலை ரயில்வே பிடபுள்யூடி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மணிமாறன், சிபிஎம் பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன், டிஆர்இயூ ஆறுமுகம், சிஐடியு மாநகர் மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.