தஞ்சாவூர், ஜூலை31 - காவிரி டெல்டா மாவட்டங்க ளின் பாசனத்துக்காக கல்லணையி லிருந்து புதன்கிழமை காலை தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி ஆற்றில் நவதானியங்கள், பூக்களை தூவி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காகவும், ஆடி பெருக்கு விழாவை கொண்டா டவும் கடந்த 28- ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக புதன்கிழமை அதிகாலை கல்லணைக்கு வந்தது. கல்லணைக்கு வந்த நீரை டெல்டா மாவட்டங்களின் பாசனத் துக்காக, புதன் காலை காவிரியில் 1,500 கன அடியும், வெண்ணாற்றில் ஆயிரம் கன அடியும், கல்லணைக் கால்வாயின் 500 கன அடியும், கொள்ளிடத்தில் 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக .தொடர்ந்து மங்கல வாத்தியம் முழங்க சுற்றுலா மாளி கையிலிருந்து அமைச்சர்களும், எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர் கள், நீர்வள ஆதாரத் துறையினர், விவசாயிகள் உள்ளிட்டோர் ஊர்வ லமாக வந்தனர். பின்னர் காவிரியில் பாசனத்துக் காக தண்ணீர் திறந்து வைத்து, நவதானியங்கள், மலர்களை தூவி விவசாயம் செழிக்க வேண்டினர். தொடர்ந்து வெண்ணாறு, கல்ல ணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு களில் தண்ணீரை திறந்து வைத்து, நவதானியங்களையும், பூக்களை யும் தூவினர். இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை க்கு வந்துள்ளது. இந்த நீர் கடை மடைப் பகுதிக்கும் செல்லும் வகை யில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறு வைக்கும், சம்பா சாகுபடிக்கும் இந்த தண்ணீர் பயனுள்ளதாக இருக்கும். அதே போல் ஆறு, வாய்க்கால் கள், குளம், ஏரிகள் தூர்வாரப்பட் டுள்ளதால் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய இந்த தண்ணீர் பயன்படும். விவசாயிகளு க்கு பயிர்கடன் தேவையான அளவு வழங்கப்படும். குளம், குட்டைகளில் வண்டல் மண் எடுக்கும் பணிகள் நடைபெறுகிறது. அங்கும் தண்ணீர் தேக்க அறிவுரைகள் வழங்கப் படும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், எம்எல் ஏக்கள் துரை.சந்திரசேகரன், கா. அண்ணாதுரை, நா.அசோக்குமார், டி.கே.ஜி.நீலமேகம், கதிரவன், வி. பி.நாகைமாலி, மாவட்ட ஆட்சி யர்கள் பா.பிரியங்கா பங்கஜம், மா.பிரதீப்குமார், ஏ.பி.மகாபாரதி, தி.சாருஸ்ரீ, மு.அருணா மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர், விவசா யிகள் பலர் கலந்து கொண்டனர்.