districts

img

உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தஞ்சாவூர், செப்.2 -  திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து, உய்யக்குண்டான் நீட்டிப்பு வாய்க்காலில், பூதலூர் பகுதி பாசனத்திற்காக திங்கள்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், நீர்வளத்துறை பொறியாளர் ரஞ்சித், பூதலூர் ஒன்றியப் பெருந்தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, திமுக பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சு.முருகானந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், வெண்டையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கனிமொழி சிவகுமார் மற்றும் கோட்டாரப்பட்டி, வெண்டையம்பட்டி, ராயமுண்டான்பட்டி, சொரக்குடிப்பட்டி, ஆவாரம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த தண்ணீரைக் கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு நீர் நிரப்பப்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.