districts

img

ஆயப்பாடி கடைவீதியில் நீர், மோர் பந்தல் திறப்பு

மயிலாடுதுறை, ஏப்.28 -  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள  திருக்களாச்சேரி ஊராட்சி, ஆயப்பாடி கடைவீதியில் சமூக நல அறக்கட்டளை மற்றும் மனிதநேய நல் உள்ளங்கள்  இணைந்து நீர் மோர் பந்தலை திறந்தன. இதற்கான நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பி னரும், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரு மான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செய லாளர் அப்துல் மாலிக், சமூக நல அறக்கட்டளையின் தலை வர் ஹாஜி நஜீர் அஹமது, ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜித்  செயலாளரும், மயிலாடுதுறை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவருமான நூருல்லாஹ், ஆயப்பாடி ஜாமியா மஸ்ஜித் பொருளாளர் காங்கிரஸ் வட்டார சிறுபான்மை அணி தலைவர் ஹலீல் ரஹ்மான், காட்டுச்சேரி ஊராட்சி  மன்றத் தலைவர் சாமிநாதன், திருவிடைக்கழி ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ராஜா, சேந்தமங்கலம் பஷீர், திருக் களாச்சேரி ஒன்றிய கவுன்சிலர் செல்வம், திருக்களாச் சேரி ஜமாத் முக்கியஸ்தர்கள், துபாய் தமிழ் மக்கள்  சேவை தலைவர் நாகை மன்சூர், சமூக ஆர்வலர் ஆரிப்  ரஹ்மான், திருக்களாச்சேரி ஊராட்சி மன்ற துணை தலை வர் ஆரிப் நிஷா ரபீக், சமூக ஆர்வலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். நீர் மோர் பந்தலுக்கான ஏற்பாடுகளை சமூக செயற்பாட் டாளரும் சமூக நல அறக்கட்டளையின் அறங்காவல ருமான ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான், சமூக நல அறக் கட்டளை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.