நத்தம், நவ.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்ப நாயக்கன்பட்டியில் புதிய பகுதி நேர ரேசன்கடை திறப்பு விழா நடைபெற்றது. திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்ப லம் புதிய பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார். விழாவில் நத்தம் நகரச் செயலாளர் ராஜ்மோகன், கூட்டுறவு சங்க செயலாளர் சிவகுருமூர்த்தி உள்ளிட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.