districts

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு

கும்பகோணம், டிச.25 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  கும்பகோணம் மண்டலத்தில் கும்பகோணம் நகர்-1 மற்றும் கும்பகோணம் நகர்-2 கிளை களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன்  தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்ததை அடுத்து அரசு  போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் மற்றும்  நடத்துநர்களின் சிரமங்களை போக்கும் வகையில், திங்களன்று கும்பகோணம் நகர்-1  மற்றும் கும்பகோணம் நகர்-2 கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறக்கப் பட்டுள்ளன. கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட கும்பகோணம் புறநகர், அரியலூர், மலைக் கோட்டை, புதுக்கோட்டை நகர், புதுக் கோட்டை புறநகர், காரைக்குடி, தஞ்சாவூர் புறநகர், தஞ்சாவூர் நகர்-1, தஞ்சாவூர் நகர்-2,  நாகப்பட்டினம், கரூர்-1, கரூர்-2, பெரம்ப லூர், ஜெயங்கொண்டம் மற்றும் குளித்தலை ஆகிய 15 கிளைகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இன்று திறந்து வைக்கப்பட்ட 2 புதிய குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளை சேர்த்து 17  குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன” என்றார். நிகழ்ச்சியில் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.மோகன், கும்பகோ ணம் மாநகராட்சி துணைமேயர் சு.ப.தமிழ ழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் டி. கணேசன், பொது மேலாளர்கள் உதவி மேலா ளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஓட்டுநர் கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணியா ளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.