திருவாரூர்,செப்.26- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக டி.கே.ரங்கரா ஜன் இருந்த போது திருவா ரூர் மாவட்டம் வலங்கை மான், ஒன்றியம் நார்த்தங் குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டி டம் கட்டுவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப் பட்டது. இந்த நிதியில் கட்டப் பட்ட வகுப்பறை கட்டி டத்தின் திறப்பு விழா வியா ழக்கிழமையன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி யின் தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமேரி சித்ரவேல் கட்டி டத்தை திறந்து வைத்தார், சிபிஎம் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா, மாவட்டக்குழு உறுப்பினர் கே.சுப்பிர மணியன்,சிபிஐ ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.