districts

img

மக்களின் நீண்ட கால கோரிக்கை ஏற்பு கருவாழக்கரையில் புதிய அங்காடி திறப்பு

மயிலாடுதுறை, அக்.7 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட கருவாழக்கரை ஊராட்சியில் கடந்த 48 ஆண்டுகளாக வாடகை கட்டி டத்தில் இயங்கி வந்த அங்காடிக்கு பொதுமக்களின் நீண்ட கால கோரிக் கையை ஏற்று புதிய கட்டிடம் கட்டப் பட்டு திறக்கப்பட்டது.  இந்த கடையின் மூலம் 710 குடும்ப  அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட் கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் ரேசன் கடை இயங்க வேண்டும் என அப்பகுதி மக்கள், பூம் புகார் எம்எல்ஏ நிவேதா முருகனிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை  ஏற்ற எம்.எல்.ஏ., முதல்வர் மு.க‌.ஸ்டாலி னின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிய ரேசன் கடை கட்ட நடவடிக்கை மேற் கொண்டார். அதன்பேரில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் 2021-22- ன்படி அரசுக்கு சொந்தமான இடத்தில்  ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன்  கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா  நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக் ்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை  வகித்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் புதிய  கட்டிடத்தை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.  முன்னதாக ஊராட்சி மன்றத் தலை வர் பழனிவேல் வரவேற்றார். ஊராட்சி  மன்ற துணைத் தலைவர் லோகநாயகி முருகன் நன்றி கூறினார்.