districts

img

ஜெயங்கொண்டத்தில் புதிய ரேசன் கடை திறப்பு

அரியலூர், டிச.21 - ஜெயங்கொண்டத்தில் புதிய ரேசன் கடை திறந்து வைத்தும்,மேல குடியிருப்பில் அமைந்துள்ள பகுதிநேர ரேஷன் கடையை முழுநேர ரேசன் கடையாக மாற்றி பொதுமக்களுக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ உணவுப் பொருட்களை வழங்கினார். ஜெயங்கொண்டம் இந்திரா நகரில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 இன் கீழ், இந்திரா நகரில் ரூ.12.30 லட்சத்தில் புதிதாக பகுதிநேர நியாய விலைக் கடை கட்டப்பட்டுள்ளது இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சி, மேலக்குடியிருப்பில், அரியலூர் மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலைக்கு உட்பட்ட பகுதிநேர நியாய விலைக்கடையை, முழு நேர நியாய விலைக் கடையாக மாற்றி ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.