திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- திருச்சி மாவட்டத்தில் 11 மாதங் களாக மூடப்பட்டுள்ள மணல் மாட்டு வண்டி குவாரிகளை உடனடியாக தமிழக அரசும், பொதுப்பணித் துறையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மணல் மாட்டு வண்டி குவாரிகளை திறந்து மாடு கள், மாட்டுவண்டி தொழிலாளர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங் கம் சார்பில் வியாழனன்று பேரணி நடைபெற்றது.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண் டானாவில் இருந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கா னோர் பேரணியாக சென்றனர். பின் னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர் .இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராமர், கட்டு மான சங்கத்தின் மாவட்ட செயலா ளர் சந்திரசேகர்,சி.ஐ.டி.யு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சீனி வாசன், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகி யோர் உரையாற்றினர். சங்க பொரு ளாளர் சர்க்கார் பாளையம் மோகன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்ற னர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மணல் மாட்டு வண்டி தொழிலா ளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.