districts

img

தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள், தலித் மக்கள் மீதான தாக்குதல்கள்

நீதியும், நிவாரணமும் கோரி கிருஷ்ணகிரி எஸ்பி-யிடம் மனு

கிருஷ்ணகிரி,ஏப். 28-

   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடரும் சாதி ஆணவப் படு கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுத்து நிறுத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

   கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஜெகன்,தலித் பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் தந்தையால் சாதி ஆணவப் படுகொலை  செய்யப்பட்ட சுபாஷ், கண்ணம்மா மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட சுபாஷின் மனைவி அனுசியாவுக்கு நீதி வழங்க வேண்டும். கோட்டையூர் தலித் மக்கள் மீதான தீண்டாமை கொடுமைகள், சாதி வெறி வன்கொடுமை தாக்குதல்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.  

   மாவட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படு கொலைகள், தீண்டாமை, வன்கொடுமை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஆலய நுழைவு போராட்டத்தில் முன் நின்ற கல்கேரி சுரேஷ் கொலை வழக்கை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லி பாபு,மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் ஆகியோர் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.   மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ், பிரகாஷ் மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஆனந்த குமார், பாதிக்கப்பட்ட கல்கேரி சுரேஷின் துணைவியார் உடனி ருந்தனர்.

   மேலும், கிட்டம்பட்டியில் சாதி ஆணவப் படுகொலையில் ஜெகனை இழந்த மனைவி சரண்யாவுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும் அரசு வேலை வழங்க வேண்டும். அதேபோல் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டு கணவனை இழந்த மனைவி அனுசியாவிற்கும் ரூ. 25 லட்சம் நிவாரணமும் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.