திருவாரூர், செப்.20 - காரைக்கால் காவேரி அசட் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத் தின்கீழ் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத் தும் “ஒருமுறை பயன் படுத்தும் நெகிழி” பயன் பாட்டைக் கட்டுப்படுத் தும் வகையிலும், திரு வாரூர் மாவட்டத்தில் முன் னோடியாக தண்டலை ஊராட்சி மன்றத்தை “ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி இல்லா ஊராட்சி மண்டலமாக” மாற்றும் வகையி லும் நெகிழி சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செப்.18 அன்று மாவட்ட ஆட்சி யர் சாருஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத் தார். நிகழ்ச்சிக்கு ஓ.என்.ஜி.சி மனித வளத் துறை முதன்மை பொது மேலாளர் கணேசன் தலைமை வகித்தார். தண்டலை ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் முன்னிலை வகித் தார். இந்நிகழ்ச்சியில் ஏரியா பொது மேலா ளர் சரவணன், பொது மேலாளர் பிரசாந்ஜித் கோகோய், பொது மேலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆறு மாதகால தொடர் திட்டமாக வடிவ மைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள், வர்த்தக சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தெரு நலச் சங்கங்கள் தன்னார்வலர்கள் உட்பட பல்வேறு அமைப்புகளின் ஆதரவுடன் விழிப் புணர்வு பிரச்சாரம், தெரு நாடகங்கள், போட்டிகள், பெண்கள், மாணவர்கள் நெகிழி யின் பாதிப்புகளை அறிந்திடும் வண்ணம் ஓவியம், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டி களை நடத்தி பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு நெகிழி பயன்படுத்துவதன் பாதிப்புகளை எடுத்துரைத்து சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ் வழங் கப்படும். ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற பிரச்சாரத் தின் மூலம் எளிதில் மக்கும் பருத்தி பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். வீடுதோ றும் ‘நெகிழி பயன்படுத்தா வீடு’ என ஸ்டிக்கர் ஒட்டி சமுதாயத்தில் மதிப்பு ஏற்படுத்தப்படும். நிகழ்ச்சியில் சமூக பொறுப்புணர்வு திட்ட முதன்மை மேலாளர் விஜய் கண்ணன், துணைத்தலைவர் மகாலெட்சுமி செல்வம், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் நடனம், ஊராட்சி செயலர் கருணாநிதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.