திருச்சிராப்பள்ளி, டிச.13- சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருச்சியில் இருந்து சேலத்திற்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கடந்த டிச.9 ஆம் தேதி சென்றது. பேருந்தில் திருச்சி கே.கே.நகரை சேர்ந்த கருணாநிதி (59) ஓட்டுநராகவும், திரு வளர்ச்சோலையை சேர்ந்த கார்த்திகேயன் (45) நடத்துநராகவும் பணியில் இருந்தனர். பேருந்து திருச்சி நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் சென்று கொண்டி ருந்த போது, அந்த வழியாக இறுதி ஊர் வலத்தில் குடிபோதையில் வந்த சிலர், இறந்தவர் மேல் கிடந்த மாலைகளை எடுத்து பேருந்து மீது வீசி, பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை ஓட்டுநர் கருணாநிதி தட்டிக் கேட்ட போது, இறுதி ஊர்வலத்தில் வந்த சிலர் கருணாநிதியை தகாத வார்த்தை களால் திட்டி, பேருந்தின் வைபரை உடைத்து அவரை தாக்கினர். இதில் அவர் காயமடைந்தார்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன் றனர். அவர்கள் போலீசாரையும் தகாத வார்த்தையில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் காயம டைந்த ஓட்டுநர் கருணாநிதியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்ப வம் குறித்து ஓட்டுநர் கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிந்து, இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வரு கின்றனர். இந்நிலையில், அரசு பேருந்தை சேதப் படுத்தியும், பணியில் இருந்த தொழிலா ளரை தாக்கியது குறித்தும் போக்கு வரத்து நிர்வாகம் சார்பில் காவல் நிலை யத்தில் புகார் அளித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதனை வலி யுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் போக்குவரத்து கழக திருச்சி மண்டல பொது மேலாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் நிர்வாகம் இதுவரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. இது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தி னரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.