தீபாவளியையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. பாபநாசம் பேரூராட்சியில் பணியாற்றும் 90-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஊழியர்களுக்கு புத்தாடைகளை, பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரேம்நாத் பைரன், கீர்த்தி வாஸன் தங்களது சொந்தப் பணத்திலிருந்து வழங்கினர்.