தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில், பாபநாசத்தை அடுத்த நெடுந்தெரு அருகே தஞ்சையிலிருந்து தனியார் பல்கலைக்கழகப் பேருந்து கும்பகோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது கும்பகோணத்திலிருந்து வந்த வேனும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேன் ஓட்டுநர் படுகாயமடைந்தார். பேருந்தில் பயணம் செய்த 4 மாணவர்கள் காயமடைந்தனர்.