பெரம்பலூர், ஜூலை 15 -
பெரம்பலூர் ரோவர் கல்லூரி மாணவர் ஒருவர், ஆசிரியர் மீது புகார் தெரி வித்து மாவட்ட ஆட்சியர் க.கற்பகத்திடம் மனு அளித்தார்.
அம்மனுவில், “தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் ராஜேஷ்குமார்(19) என்ற மாணவர் பி.காம் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த 15.7.2023 அன்று முதல் வகுப்பிற்கு வந்த ஆசிரியர் சீலா, ராஜேஷ் குமாரை, ‘எந்திரிடா... என்னடா முடி குறவன் மாறி இருக்கு; குறவனாடா நீ’ என்று சக மாணவர்கள் முன்பு பேசினார். அதற்கு மாணவர் ராஜேஷ்குமார், ‘அப்படியெல்லாம் பேசா தீங்க’ என்றதற்கு ‘அப்படித் தான் சொல்லுவேன்; என்ன பண்ணுவ; வெளிய போடா’ என்று மிரட்டி வெளியே அனுப்பினார்.
இச்சம்பவம் குறித்து மாணவர் முகநூலில் பதிவிட் டுள்ளார். இதனையறிந்த நிர்வாகம் மாணவரை கல்லூ ரிக்கு வரச் சொல்லி மிரட்டி, அவரது அலைபேசியை பறித்து முகநூலில் போட்ட பதிவினை நீக்கி விட்டு, மாணவரை 15 நாட்கள் இடைநீக்கம் செய்தது. மாணவர் ராஜேஷ்குமார் 15 நாட்கள் கழித்து கல்லூ ரிக்குச் சென்ற போதும், ‘அடுத்த வாரம் வா’ என்று இதுபோல ஐந்து மாதங் களாக அலைக்கழித்துள்ள னர்.
இதுகுறித்து 11.5.2023 அன்று தபால் மூலமாக எஸ்.சி/எஸ்.டி. ஆணையத் திற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் மனு அனுப்பினோம். இதற்கான பதில் மனு 25.5.2023 அன்று வந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தை அணுகிய போது, சரியான பதிலை தர மறுத்துவிட்ட னர். எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிந்து முறையாக விசா ரணை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.