திருச்சிராப்பள்ளி, மே 24 - திருச்சி புறநகர் மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் சங்க மாவட்டக் குழு கூட்டம் திங்களன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க புறநகர் மாவட்ட தலைவர் நவமணி தலைமை வகித்தார். ஜூன் 10, 11 ஆம் தேதிகளில் திருவா ரூரில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டு பணிகள் குறித்து சம்மேளன பொதுச் செய லாளர் சிவாஜி பேசினார். பெட்ரோல், டீசல், கேஸ் மீதான செஸ் வரியை குறைக்க வேண்டும். இன்சூரன்ஸ், எப்.சி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத் தத்தை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநில மாநாட்டு பிரதிநிதி களாக எஸ்.சம்பத், கே.நவமணி, பி.சந்திர சேகர், குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டத்தில் சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆட்டோ சங்க புறநகர் மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறி னார்.