districts

திருச்சி முக்கிய செய்திகள்

வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  புதுக்கோட்டையில் ஆய்வு

புதுக்கோட்டை, டிச.17 - வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும்  வாக்காளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் என்.வெங்கடா சலம், புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, புதுக்கோட்டை  மாவட்டத்தில், கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவிலூர் மருத்துவநகர், பழைய கந்தர்வகோட்டை கிராமத்தி லும், புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சார்லஸ் நகரிலும்,  விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் கிராமத்தி லும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்கீழ் பெறப்பட்ட படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை தணிக்கை செய்யும் பணிகளை, நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்கா ளர் பட்டியல் பார்வையாளர் முனைவர் என்.வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலையில்  சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2024-க்கான காலத்தில் பெறப் பட்ட படிவங்களில் 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட படிவங்கள் (6, 7 மற்றும் 8) பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன் பொருட்டு, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-இன் சிறப்பு முகாம்க ளில் பெறப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளையும் நேரில் பார்வையிட்டார்.

திருச்சியில் ஓய்வூதியர் நாள் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.17 - மத்திய-மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு திருச்சி மாவட்ட மையம் சார்பில் ஓய்வூதியர் நாள் கருத்தரங்கம் ஞாயிறன்று திருச்சியில் நடந்தது. கருத்தரங்கிற்கு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் இளமாறன் துவக்க உரையாற்றினார்.  பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற டி.எஸ் நகரா உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதியரசர்கள் டி.எஸ் தேசாய், வி.டி.துல்கா புட்கர், ஓ.சி.ரெட்டி, பஹருல் இஸ்லாம் மற்றும் தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் ஆகியோர் 17.12.1982 அன்று வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி, தமிழ்நாடு ஓய்வுபெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் பஷீர், என்.சி.சி.பி.ஏ மாவட்டச் செயலாளர் கோபால்சாமி, ஏ.ஐ.பி.டி.பி.ஏ ருக்மாங்கதன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை ஓய்வு பெற்ற மாதத்திலேயே வழங்க வேண்டும்., மாதந்தோறும் ஓய்வூதியத் தொகையை தாமதமின்றி மாத இறுதி நாளில் வழங்க வேண்டும். 96 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில உதவி தலைவர் சண்முகம் நிறைவுரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.

பெற்றோர் ஆசிரியர் கழக கணக்குகள் முறையாகப் பராமரிக்கப்படுவது இல்லை மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, டிச.17 - அரசுக் கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரி யர் கழக வரவு-செலவுக் கணக்குகள் முறை யாகப் பராமரிக்கப்படுவதில்லை என இந்திய  மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில்,  ஆண்டுதோறும் நான்காயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதலாமாண்டு படிப்பதற்கு சேர்க்கை நடைபெறுகிறது. இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து படிக்க வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களிடம் ஆண்டுக்கு ஒருமுறை சிறப்புக் கட்டணம், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் கட்ட ணம் மற்றும் நன்கொடை என பல வழிகளில்  வசூல் செய்யப்படுகிறது. இக்கட்டணத்தை மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி வசூல் செய்வது தனியார் கல்லூரி நிர்வாகத்தின் சுரண்டலுக்கு நிகரானது. பல லட்சம் ரூபாய் வசூல் செய்தும்  பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக மாணவிகளுக்கு தேவையான கழிப்பறை வசதிகள்கூட பெரும்பாலான கல்லூரிகளில் செய்து தரப்படவில்லை. பெரும்பாலான கல்லூரிகளில் பெற் றோர் ஆசிரியர் கழகத்தில் வசூல் செய்யப்ப டும் தொகைகளுக்கு முறையாக வரவு செல வும் பராமரிக்கப்படுவதில்லை. எனவே,  மாவட்ட நிர்வாகம் அரசுக் கல்லூரிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வசூல் செய்யப்படும் தொகைக்கு முறையாக வரவு-செலவு பராமரிக்கப்படுகிறதா என்பதை  ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள், மக்கள் பாதிக்கப்படாமல் வண்ணான்குளத்தை தூர்வார வேண்டும் அனைத்துக் கட்சி வலியுறுத்தல்

அறந்தாங்கி, டிச.17 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கியில் வண் ணான்குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக  ஞாயிறன்று அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு காங்கிரஸ் நகரத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், வண்ணான் குளத்தை தூர்வாரி நீர்வழிப்  பாதை ஏற்படுத்த சட்டப்பூர்வ  நடவடிக்கை எடுக்க வேண் டும். நீர்வழிப் பாதையை  விட்டு, பல லட்சம் செலவு செய்து வண்ணான் குளத் தைச் சுற்றி 70 ஆண்டு களாக வீடு மற்றும் கடைகள்  கட்டி தொழில் செய்து வரு கிறார்கள். கட்டிடம் கட்ட அனு மதித்து, மின் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள். தொ ழில்வரியும் வசூலிக்கின்ற னர்.  ‘இது நீர்நிலைப் பகுதி’  என்று தற்போது உயர்நீதி மன்றம் கூறியிருப்பதால், வருவாய்த்துறையினர் கட்டி டங்களை இடித்து அப்புறப் படுத்த முயற்சிப்பதை ஏற்க முடியாது. அந்த பகுதி தொழிலாளர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படாமல், குளத்தின் உள்பகுதியை தூர்வாரி, குளக்கரையில் நடைபாதை அமைக்க வேண்டும். மேலும் இது குறித்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அந்தத் தீர்மானம் வரு வாய்த் துறை மூலம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். 87  குடும்பங்களையும் காக்க  வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது. கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் தி.முத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், சிபிஐ, சமாஜ்வாதி கட்சி, அதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியினர் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளை மக்களுடன் முதல்வர் முகாம் 
தஞ்சாவூர், டிச.17 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் டிச.19 (செவ்வாய்) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து, பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், டிச.19 (செவ்வாய்) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமில், மின்வாரியம், வருவாய் பேரிடர் மேலாண்மை  துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, காவல் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் வாழ்வாதாரக் கடன் உதவி கள் உள்ளிட்ட சேவைகளுக்காக நடைபெற உள்ளது.  பேராவூரணி பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்  அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டு தங்கள்  கோரிக்கையினை கணினியில் பதிவு செய்து தீர்வு பெற லாம். அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுவதை முன்னிட்டு,  பேராவூரணி பேரூராட்சி பகுதி முழுவதும், வாகனங்களில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டு விளம்பரமும், வீடு தோறும்  துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே  விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத தப்படுகிறது.

டிச.19 சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருட சேவை திருவிழா

கும்பகோணம், டிச.17 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவில் சீனிவாச பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திருமங்கை ஆழ்வாரின் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. வருடத்திற்கு இருமுறை  நடைபெறும் கல் கருட சேவையில் இத்தலம் உலக பிரசித்தி  பெற்ற ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மார்கழி மாத உற்சவத்தை முன்னிட்டு கல்  கருட சேவை டிச.19 அன்று நடைபெறுகிறது. இதன் துவக்க நாளான ஞாயிறன்று கொடியேற்று விழா நடைபெற்றது. இதில்  ஆலய பட்டாச்சர்கள், கோயில் நிர்வாக செயல் அலுவலர் பிரபாகரன், நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து  கொண்டனர்.

திருநாகேஸ்வரம் கோயிலில்  ஆயிரம் பேருக்கு அன்னதானம் 

கும்பகோணம், டிச.17 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாகநாத சுவாமி திருக்கோயிலில், ஞாயிறுதோறும் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதான நிகழ்ச்சியை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் துவக்கி வைத்தார். திருவிடை மருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன், கோயில் துணை  ஆணையர் உமாதேவி, அறங்காவலர் குழுத் தலைவர் சிவ குருநாதன் மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மனைவியைக் கொன்ற கணவன் கைது
அரியலூர், டிச.17- பெரம்பலூர் மாவட்டம், வடக்கு மாதவி எளம்பலூரைச் சேர்ந்தவர் மூர்த்தி மனைவி ராணி (60). இத்தம்பதி அரிய லூர் அருகேயுள்ள பாலம்பாடியில் குடிசை அமைத்து, அங்கு கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை யில் ராணி, கடந்த டிச.15 அன்று அங்குள்ள கருவேலங்காட் டில் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.  இதுகுறித்து அரியலூர் நகர காவல் துறையினர் வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டதில், குடும்ப பிரச்சனையில் கணவர் மூர்த்தி, ராணியை கல்லால் தாக்கி  கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறை யினர் மூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில்  அடைத்தனர்.

திருநறையூர் ராமநாதசாமி கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா துவக்கம் 

கும்பகோணம், டிச.17 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திரு நறையூரில் ராமநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு தசரத  சக்கரவர்த்தி, ராமபிரான் வழிபட்ட மங்கள சனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. டிச.20 அன்று நடைபெறும் சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் செயல் அலுவலர் பா. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போலி பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்த காவல்நிலைய எழுத்தர் பணியிடை நீக்கம்; தனிப்பிரிவு ஏட்டு பணியிலிருந்து விடுவிப்பு

தஞ்சாவூர், டிச.17-  போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற  உறுதுணையாக இருந்த சேதுபாவாசத்திரம் காவல்  நிலைய எழுத்தர் பணியிடை நீக்கமும், தனிப்பிரிவு  தலைமைக் காவலர் பணியிலிருந்தும் விடுவிக்கப் பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில்  இருந்து, இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவ ணங்கள் மூலம் பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட கியூ ப்ராஞ்ச் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ ப்ராஞ்ச் பிரிவினர் ரகசிய விசாரணை நடத்தியதில், சேதுபாவாசத்திரம் அருகே  ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில், கிராம தபால்கார ராக பணியாற்றிய கோவிந்தராஜ் (64), கும்பகோ ணத்தைச் சேர்ந்த வடிவேல் (52), ராஜூ (31), ராஜா மடத்தை சேர்ந்த சங்கர் (42),  சேதுபாவாசத்திரம் காவல்  நிலைய தற்காலிக கணினி ஆபரேட்டர் பாலசிங்கம் (36), திருச்சி கல்காண்டார்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன் (52) ஆகிய 6 பேரையும் கடந்த டிச.13  அன்று  கைது செய்து சிறையில் அடைத்தனர்.   மேலும், மல்லிப்பட்டினம் கிராம முன்னாள் தபால் காரர் பக்ரூதீன், திருச்சி உறையூரைச் சேர்ந்த இலங்கைத்  தமிழர் சுந்தர்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் தேடி  வருகின்றனர். இதற்கிடையில் சேதுபாவாசத்திரம் காவல் நிலை யத்தில் பணியாற்றும் சேஷா என்கிற எழுத்தர் பணியில்  கவனக்குறைவாக செயல்பட்டதாகவும், போலி ஆவ ணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்த தாகவும் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அந்த காவல் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலாக பணியாற்றிய சச்சிதானந்தம் என்பவரை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் மல்லிப்பட்டினம் கிராம அஞ்ச லகத்தில் போலி ஆவணங்கள் மூலம், போலியான முக வரியில், இலங்கைத் தமிழர்கள் 20 பாஸ்போர்ட்கள் பெறப்பட்டுள்ள தகவல் குறித்து கியூ ப்ராஞ்ச் காவல்து றையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிச.19-இல் வருவாய் கிராம ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு எடுக்கும் போராட்டம்

அரியலூர், டிச.17 - கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிச.19 அன்று, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்  சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு எடுக்கும் போராட் டத்தில் ஈடுபட உள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இணை தலைவர் கொளஞ்சி மணி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாநில  தணிக்கையாளர் ராஜேஷ் கண்ணன், முன்னாள்  செயலாளர் ஜோதிநாயகம், பணி நிறைவு பெற்ற  கிராம ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்கத் தின் மாநிலத் தலைவர் திருமலை வாசன் சிறப்பு ரையாற்றினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு மலைவாசன் கூறுகையில், “தமிழ்நாடு வருவாய்  கிராம ஊழியர்களுக்கு கருணை அடிப்படை யில் வேலை வழங்க வேண்டும் என தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறோம். கடந்த 1993 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் கொண்டு  வரப்பட்ட கருணை அடிப்படையிலான வேலையை, தற்போதைய அரசு கடந்த மார்ச் 8  அன்று ரத்து செய்துள்ளது.  இந்த கருணை அடிப்படையிலான வேலையை மீண்டும் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப் படியாக வழங்கப்பட்டு  வந்த ரூ.2500-ஐ மீண்டும் வழங்க வேண்டும்.  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு  ஊழியர் பட்டியலில் வருவாய் கிராம ஊழியர் களை டி பிரிவில் இணைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி, அமைச்சரை பலமுறை சந்தித்து மனு  அளித்துள்ளோம். ஆனால் இதுவரை கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. எங்களின் கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையிலும் ஐந்து கட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம்.  இதனொரு கட்டமாக டிச.19 அன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஒரு நாள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட  உள்ளோம். டிச.28 அன்று அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் எங்களின் கோரிக்கையை  நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத் தில் ஈடுபட உள்ளோம்” என்றார். ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு தலைவராக  கருப்பையா, துணைத் தலைவராக மணி மேகலை, செயலாளராக மணிகண்டன், துணைச்  செயலாளராக அன்பழகன், பொருளாளராக செந்தில்குமார், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.