தஞ்சாவூர், ஜூன் 8-
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 5 அன்று நடை பெற உள்ளது. இக்கூட்டத்தில் சென்னை ஓய்வூதிய இயக்குநர் கலந்து கொள்கிறார்.
அது சமயம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதி யர்கள் தங்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை யும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவித்து சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களிடம் விவரங்கள் பெறலாம்.
கூட்டத்தில், விவாதிக்க ஏதுவாக தீர்வு செய்யப்படாத குறைகளை தெரிவிக்க விரும்பும் ஓய்வூதியர்கள் கடைசி யாக பணிபுரிந்த அலுவலகத்தின் பெயர், பதவி, ஓய்வு பெற்ற நாள், கோரிக்கை விவரம், செல்போன் எண் மற்றும் கோரிக்கை தொடர்புடைய அலுவலகத்தின் முகவரியை தெளிவாக குறிப்பிட்டு வருகிற 30-ஆம் தேதிக்குள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தவறாது, 2 பிரதி களில் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்’’ என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.