திருச்சிராப்பள்ளி, ஆக.22 -
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் தொழி லாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலா ளர்களிடம் முறையாக விடுப்பு கடிதம் பெற்றுக் கொண்ட பின்னரும் தொழிலாளருக்கு ஆப்செண்ட் போட்டு சம்பளம் பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும். தர மான உதிரி பாகங்கள் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு வருமானத்துடன் இந்த ஆண்டு வரு மானத்தை ஒப்பிட்டுப் பார்த்து ஊழியர்களுக்கு மெமோ வழங்குவதை கைவிட வேண்டும். போதிய ஆட்கள் இல்லாததால் உரிய காலத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல், கூடுதல் நேரம் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு பணப்பயன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டல திருச்சி புறநகர் கிளை முன்பு நடந்த கூட்டத்திற்கு கிளைத் தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மத்திய சங்க பொதுச் செயலாளர் கருணாநிதி, மத்திய சங்க துணை தலைவர்கள் மாரியப்பன், முத்துக்கருப்பன், கிளை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.