districts

img

இலவச வீட்டுமனை வழங்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள்

திருச்சிராப்பள்ளி, நவ.12 - வாடகை வீட்டில் வசிக்கும் ஏழை,  எளிய மக்களின் நலனுக்கான தமிழக  அரசு இலவச வீட்டு மனை வழங்கும்  திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் ஆய்வாளர். முத்தரசநல்லூர் வருவாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் 59 விவசாய தொழிலாளர் குடும்பங்கள் 12 ஆண்டு காலமாக தொடர்ந்து மூன்று முறை மனு கொடுத்து, மூன்று  முறை விசாரணை செய்த கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவது முறை விசாரணை செய்த கோப்பு, கடந்த ஒன்றரை ஆண்டு  காலமாக மாவட்ட வருவாய் அலுவல ரின் பார்வையில் இருந்தும், இலவச வீட்டு மனை வழங்காமல் காலம் தாழ்த்தி, 4 ஆவது முறையாக மீண்டும்  விசாரணை செய்யச் சொல்லி உத்தர விடும் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரையும், வட்டாட்சியருக்கு உறுதுணையாக இருக்கும் ஸ்ரீரங்கம் வருவாய் ஆய்வாள ரையும் கண்டித்து அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க அந்த நல்லூர் ஒன்றியக் குழு சார்பில் செவ்வா யன்று ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர்  நடராஜன் தலைமை வகித்தார். போ ராட்டத்தை விளக்கி மாநிலச் செய லாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், விவசாயத் தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் தங்க துரை, மாவட்டச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பொருளாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர். இதில் விவசாயத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வரும் டிசம்பர் மாதம் இறுதிக் குள் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் 59 பேருக்கும்,  இலவச வீட்டு மனை பட்டா வழங்கு வது, கலைஞர் கனவு திட்டத்தில் வீடு கட்ட நிதி வழங்க பரிந்துரைப்பது என  எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப் பட்டது.  இதையடுத்து காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.