districts

img

நூறுநாள் வேலை கோரி பூதலூரில் மார்க்சிஸ்ட் கட்சி மறியல்

தஞ்சாவூர், ஜூலை 10- 100 நாள் வேலைத்திட்ட மான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிய ளிப்பு திட்டத்தின், வேலை  அடையாள அட்டை வைத் துள்ள அனைவருக்கும் நிபந்தனை இன்றி தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமையன்று மறியல் போராட்டம் நடை பெற்றது.  கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமை யில், பூதலூர் நான்கு ரோட்டில் இருந்து நூற்றுக் கும் மேற்பட்டோர் ஊர்வல மாகச் சென்று மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து பூதலூர் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர்.  அதிகாரிகள் உறுதிய ளித்தவாறு வேலை வழங்கா விட்டால், வரும் ஜூலை.18 ஆம் தேதி  செங்கிப்பட்டி யில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அலுவ லர்களிடம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச் செல்வி தெரிவித்தார்.  மறியல் போராட்டத்தில், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கே.ராஜ கோபால், என்.வசந்தா, வி. அஞ்சலிதேவி, பி.ராஜு, எம். ஜி.சரவணன், கே.ஏ.முரு கன், ஆர்.கோவிந்தராஜ், ஜி. கண்ணன், பி.முத்து கிருஷ்ணன் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர் கள் திரளாக கலந்து கொண்டனர்.