புதுக்கோட்டை, ஏப்.15- எம்.எம். தனியார் குவாரியை மூடுவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததைத் தொ டர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற இருந்த காத்திருப்புப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா வத்தனாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட் டது வெவ்வயல்ப்பட்டி மற்றும் வத்தனா குறிச்சி ஆதிதிராவிடர் கூட்டு குடியிருப்பு. இதன் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக எம்எம் கிரஷர் என்ற பெயரில் கிரஷர் மற்றும் தார் பிளாண்டுடன் கூடிய கல் குவாரி உள்ளது. இந்நிலையில், குவாரி அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும், அதில் வைக்கப் படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்பு களில் விரிசல் ஏற்படுகிறது. குவாரியின் அதிர்வால் குழந்தைகள் மன அளவில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. வெளிவரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்படுவதோடு பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. தண்ணீர் மாசுபடுகிறது என அடுக்கடுக்காக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், வத்தனாக்குறிச்சி, வெவ்வயல் பட்டி வத்தனாக்குளிச்சிகாலனி, சத்திரப் பட்டி, தண்ணீர்பந்தல்ப்பட்டி, கதிரேசன்நகர், புதுவயல், திருமலைராயபுரம், உடையாம் பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக சிரமத்தைச் சந்தித்து வரு கின்றனர். எனவே, இக்குவாரியை மூடக் கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் துறை யினருக்கும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த கிரஷரை மூடக் கோரி கடந்த ஒரு ஆண்டுகளாக மறியல் போராட்டமும் அதனைத் தொடர்ந்து சம்பந்தப் பட்ட கிரஷர் முற்றுகை போராட்டமும் நடை பெற்றது. இருப்பினும் கிரணர் தொடர்ச்சி யாக செயல்பட்டு வருவதால் ஆத்திர மடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து ஏப்ரல் 15 அன்று வெவ்வயல் பட்டி யிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்று ஆட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஸ்ரீதர் தலைமையில், கந்தர்வ கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், ஒன்றியக் கவுன்சிலர் சூசைமேரி, ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மாயழகு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்காணோர் வெவ் வயல் பட்டியில் குவிந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட இருந்த கட்சித் தலைவர்களுடன் வட்டாட்சி யர் சக்திவேல் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, எம்எம் கிரஷர் பட்டா இடத் தில் மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்திலும் கடந்த 15 ஆண்டு காலமாக கற்களை வெட்டி எடுத்து கனிமக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களுக்கும் கால் நடைகளுக்கும் விவசாயத்திற்கும் ஆபத் தாக செயல்பட்டு வரும் குவாரியை மூட பல முறை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு எந்தவித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அதனால் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் எம்.எம். கிரஷரை நிரந்தரமாக மூட தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும். இல்லை யென்றால் போராட்டத்தை தொடருவோம் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், குவாரி மீதான புகார் குறித்து இறுதி விசாரணை நடை பெற்று வருகிறது. விசாரணை அடிப்படை யில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை கல்குவாரி இயங்காது. அதையும் மீறி கல் குவாரியில் பணிகள் மேற்கொண்டால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் நலன் கருதி கிரஷர் இயங்குவது நிறுத்தி வைக்கப்படும். ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த நடைபயணம் மற்றும் காத்திருப்பு போராட் டம்தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படு வதாக அறிவிக்கப்பட்டது.