districts

img

திருமெய்ஞானம் தியாகிகள் நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.19 - 1982 ஆம் ஆண்டு நடந்த தொழி லாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக போ ராட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள் அஞ்சான், நாகூர்,  ஞானசேகரன் ஆகியோர் ஜன.19 அன்று தமிழக போலீசார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். அந்த தியாகிகளின் வீரத்தை போற்றும் வகையில், ஞாயிறன்று டெல்டா மாவட்டங்களின் பல்வேறு  இடங்களில் வீரவணக்க நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது. திருச்சியில் சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட் டப் பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தி னர். இதில் நிர்வாகிகள் சிவக் குமார், ஜெயராமன், ராஜு, சார்லஸ், விவசாய தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் தங்கதுரை, டிஆர்இயு லெனின், ராஜா, மெடிக்கல் சங்க மாநிலச் செயலாளர் செல்வராஜ், மாநிலக்  குழு உறுப்பினர் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் திருமெய்ஞானம் தியாகி களுக்கு அஞ்சலி மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி, தஞ்சாவூர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு, சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வி.தொ.ச, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர்  பி.செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி எஸ்.கோவிந்தராஜ், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாவட்டத் தலை வர் ஆர். பிரதீப் ராஜ்குமார், மாவட்டக்  குழு உறுப்பினர் கே.அபிமன்னன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் செங் குட்டுவன், இ.டி.எஸ்.மூர்த்தி, கே. அன்பு, பி.என்.பேர் நீதி ஆழ்வார்,  ஜீவா, ஏஐடியுசி நிர்வாகிகள் வெ. சேவையா, துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். நிகழ்வில், தியாகிகளுக்கு செவ்வணக்கம் செலுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது.  பெரம்பலூர் அஞ்சான், நாகூரான், ஞான சேகரன் தியாகிகளுக்கு, சிஐடியு பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் ஞாயிற்றுக்கிழமை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அலுவலகத்தில் சிஐ டியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. சிஐ டியு மாவட்ட துணைச் செயலாளர்  செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்  கிருஷ்ணசாமி உட்பட பங்கேற்றனர்.