திருச்சிராப்பள்ளி,பிப்,1- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவி லில் கடந்த 16 ஆண்டுகளாக தனி யார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 120 தூய்மைப் பணி யாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் 120 தூய்மைப் பணியாளர்களையும் கடந்த 31 ஆம்தேதி முதல் வேலையிலிருந்து நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி 678 ரூபாயை வழங்காத கோவில் நிர்வாகத்தை கண்டித் தும். 120 தூய்மைப்பணியாளர்க ளுக்கு தொடர்ந்து பணி வழங்க வலியுறுத்தியும் சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை யன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரங்கா ரங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் கோவில் நிர்வாகம் தூய்மைப்பணியா ளர்களுக்கு வேலை வழங்கவோ, பேச்சுவார்த்தைக்கோ அழைக்க வில்லை. இதையடுத்து சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் வியா ழக்கிழமையன்று ரங்கா ரங்கா கோபுரம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் போரிகார்டு கள் கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் சங்கத் தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. பின்னர் தொழிற் சங்கத்தினர் தடுப்புகளை தாண்டி சென்று ரங்கா ரங்கா கோபுரம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்ட செயலாளர் மாறன், சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதிசெய லாளர் தர்மா, வாலிபர் சங்க பகுதிசெயலாளர் சந்துரு, சிஐடியு நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், வெற்றிச்செல்வன், கணேசன், வீரமுத்து, ராஜ மாணிக்கம், மகேஷ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர்.