districts

img

மருதுபாண்டியர் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா

தஞ்சாவூர், செப்.7 -  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி யில், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு துறை, உணவியல் உணவக மேலாண்மை மற்றும் சமையல் அறிவியல் ஆகிய துறைகள் இணைந்து செப்.1 முதல் 7  வரை ஊட்டச்சத்து வார விழாவை நடத்தி னர். இதையொட்டி, கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா, மிஸ்டர் &  மிஸ் நியூட்ரிசியன் போட்டிகள் நடத்தப்பட் டன. தொடர்ந்து, வல்லம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு உணவுக் கண்காட்சி மற்றும் மிஸ் நியூட்ரி சியன் போட்டிகள் நடத்தப்பட்டன. முளை கட்டிய தானியங்களின் பயன்களையும், அவற்றை உண்ண ஊக்குவித்தும், அத்துறை  மாணவர்கள் தாங்கள் தயாரித்த உணவு  வகைகளை கண்காட்சிகளாக வைத்திருந்த னர்.  கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருது பாண்டியன் வழிகாட்டுதலின்படி நடை பெற்ற நிகழ்வுகளில் கல்லூரி முதல்வர் மா. விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத்  துறைத் தலைவர் கே.ராஜபிரியா ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.  விழாவில், சிறப்பு விருந்தினராக மாவட்ட  சமூக நல அலுவலர் ஆர்.டி.லதா சிறப்பு ரையாற்றினார். முன்னதாக ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை துறை உதவிப் பேராசி ரியர் விவேகா வரவேற்றார். உணவக மேலாண்மைதுறை உதவிப் பேராசிரியர் கவி பிரியா நன்றி கூறினார்.