districts

திருச்சி முக்கிய செய்திகள்

என்எஸ்எஸ் முகாம் நிறைவு

அறந்தாங்கி, அக்.4 - ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் கடந்த செப்.27 அன்று துவங்கப்பட்டு வியாழனன்று நிறைவுபெற்றது. நிறைவு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தாம ரைச்செல்வன் தலைமையேற்றார். நாட்டு நலப் பணி திட்ட  அலுவலர் சுப்பிரமணியன் ஏழு நாட்களாக சிறப்பு முகா மில் பள்ளி தூய்மைப் பணி, வடக்கலூர் திருக்கோயில் தூய்மைப்பணி, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றல் உள்ளிட்டவற்றில் நடைபெற்ற பணிகள் குறித்த திட்ட அறிக் கையை சமர்ப்பித்தார். 

மர்ஜிக் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தால் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் பொருளாதாரக் குற்றப்பிரிவு அறிவிப்பு 

தஞ்சாவூர், அக்.4 -  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா வழுத்தூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த “மர்ஜிக் கேப்ஸ் &  டிரான்ஸ்போர்ட்” நிறுவனம் பொதுமக்களிடமிருந்து முதலீடு களை பெற்றும், மர்ஜிக் கேப்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதில் வரும் லாபத்தொகையில் பங்கு தருவதாக கூறி பெறப்பட்ட தொகையை திருப்பித் தராமலும், லாபத் தொகையில் பங்கு தராமலும் ஏமாற்றியதாக புகார்கள் வரப்பெற்றன. அதன்பேரில், தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவில் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. இவ்வழக்கில் மேற்படி “மர்ஜிக் கேப்ஸ்  டிரான்ஸ்போர்ட்” நிறுவனத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் யாரே னும் முதலீடு செய்து, முதலீட்டு தொகை திருப்பித் தரப்படா மல் மேற்படி நிறுவனத்தால்  ஏமாற்றப்பட்டிருந்தால், அவர்கள்  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை, 57பி, ராஜப்பா நகர்  முதல் தெருவில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்  ஆய்வாளர் அலுவலகத்தில் நேரில்  உரிய ஆவணங்களு டன் ஆஜராகி புகார் கொடுக்கலாம்.  மேலும், பொதுமக்கள் இது போன்ற மோசடி நிறுவ னங்களில் முதலீடுகளை செய்து ஏமாற வேண்டாம் என  தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெ.ரேவதி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் இன்று கல்விக்கடன் முகாம் 

தஞ்சாவூர், அக்.4 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான கல்விக்கடன் சிறப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளன.  இம்முகாம், அக்.5 (சனிக்கிழமை) தஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல்  மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவில்  நடைபெறும் கல்விக்கடன் மேளாவில் மாணவ, மாணவி யர்கள் கலந்து கொள்ளலாம்.  இம்முகாமில் கல்விக் கடன் பெற விரும்பும், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பெற் றோர், பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், குடும்ப அட்டை நகல், பான்கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் -2, ஆண்டு வருமானம், சாதிச்சான்றிதழ் நகல் மற்றும் முதல்  பட்டதாரி சான்று நகல், கல்லூரியில் கல்வி பயில்வதற்கான சான்று (Bonafide Certificate), கல்வி கட்டண விபரச் சான்று, மாணவ, மாணவியர்களின் மற்றும் பெற்றோர், பாது காவலரின் வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங் களுடன் நேரில் கலந்து கொள்ளலாம் என பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.

அரசு மானியத்துடன் தொழிற்கடன் முகாம்

புதுக்கோட்டை, அக்.4 - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அரசு  மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கும் முகாம்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில்  வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் பேசு கையில், “படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனை வோர்களுக்கான தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், மத்திய கூட்டு றவு வங்கி, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், நேரடி வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் 1,065 பய னாளிகளுக்கு ரூ.75.28 கோடியில் கடனுதவிகள் வழங்கப்பட்டன” என்றார்.

வன்கொடுமை பாதிப்பு:  தொடர்பு எண்கள் அறிவிப்பு

கரூர், அக்.4 - கரூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப் பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர்  வழக்குப் பதிவு செய்தல், தீருதவிகள் தொடர்பான முறையீடு களை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா எண்களில் பதிவு செய்யலாம். இந்த எண்களில், அரசு விடுமுறை  நாட்கள் நீங்கலாக, அலுவலக நாட்களில் பணி நேரத்தில் புகார்களை பதிவு செய்யலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளார்.

மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை திறப்பு: விளாமுத்தூரின் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

பெரம்பலூர், அக்.4 - பெரம்பலூர் வட்டம் விளாமுத்தூர் கிரா மத்தில் ரூ.3.90 கோடியில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்  தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ்  பச்சாவ் தடுப்பணையினை பார்வையிட்டார். மருதையாறு, கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். மேலும் இது  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தம்பிரான் பட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள பச்சை மலை மலையிலிருந்து, பெரம்பலூர் மற்றும்  அரியலூர் மாவட்டங்கள் வழியாக தென் கிழக்கு திசையில் பாய்ந்து, கொள்ளிடத்தில் இணைகிறது. இந்த தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளதால் தடுப்பணையைச் சுற்றியுள்ள பகுதியில் 125 கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து, மறைமுக ஆயக்கட்டு 665.50 ஏக்கர்  விவசாய நிலங்கள் பயனடைவதுடன் குடிநீர்  ஆதாரமும் அதிகரிக்கும். விளாமுத்தூர் கிரா மம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்  முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும்  குறைந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. இந்த தடுப்பணையால் விளா முத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள பகுதி களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.  இதன் மூலம் 665.50 ஏக்கர் பரப்பளவுள்ள ஆயக்கட்டு உறுதிப்படுத்தப்படும். இத்திட்டம்  தற்போதுள்ள ஆயக்கட்டை உறுதிப்படுத்து வது மட்டுமின்றி, அருகில் உள்ள 125 கிணறு களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வ தற்காக நிலத்தடி நீரை நிரப்புகிறது. கால்நடை களின் குடிநீர் தேவைக்கும் பயனாக இருக்கும்.  இந்த தடுப்பணை சுமார் 25 மீட்டர் நீளம்  கொண்டதாகவும், 1.20மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே இது  திறக்கப்பட்டுள்ளதால், பருவமழை பெய்யும் போது முழுமையாக மழைநீர் சேகரிக்கப் படும். இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பணி உயர்வு வழங்க கோரி கரூரில் அங்கன்வாடி ஊழியர்கள் நள்ளிரவு வரை போராட்டம்

கரூர், அக்.4 - பணி உயர்வு கோரி அங்கன்வாடி ஊழியர்கள் கரூரில் நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் அங்கன்வாடி மினி மையங்களில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிற பணியாளர்களுக்கு மெயின் மையங்களில் பணி உயர்வு வழங்க வேண்டும். 10 ஆம் வகுப்பு முடித்தும், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிற உதவியாளர்களுக்கு அங்கன்வாடி ஊழியராக பணி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கரூர் மாவட்ட திட்ட அலுவலகத்தில் அக்.3 அன்று மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை முற்றுகை போராட்டம்  நடைபெற்றது.  போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.எஸ்.அன்பழகன், மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். அங்கன்வாடி சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, மாவட்ட பொருளாளர் கே.கலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் அங்கன்வாடி சங்க மாநிலத் தலைவர்களிடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், அக்.4 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்  கொட்டையூர் ஒழுங்கு முறை  விற்பனைக் கூடத்தில்  பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி தலைமை வகித்தார்.  இதில்  கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து மொத்தம்  272 விவசாயிகள், 255 குவிண்டால் பருத்தி எடுத்து  வந்தனர். கும்பகோணம், செம்ப னார்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த 5 வணி கர்கள் கலந்து கொண்டு  அதிகபட்சம் குவிண்டா லுக்கு ரூ.7,599, குறைந்த பட்சம் ரூ.6,100, சராசரி ரூ. 6,700 என விலை நிர்ணயித்த னர். பருத்தியின் மதிப்பு ரூ.17  லட்சம்.

சிபிஎம் ரசீது  வழங்கும் பேரவை

மயிலாடுதுறை, அக்.4 - மயிலாடுதுறை மாவட் டம், திருக்கடையூர் அருகே யுள்ள டி.மணல்மேடு கிரா மத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் தரங்கம்பாடி, செம்ப னார்கோவில் ஒன்றியங்க ளின் உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. சிம்சன் தலைமையில் தோ ழர்கள் எஸ்.சிங்காரம், எஸ்.எத்திராஜ் நினைவுத் திடலில் வெள்ளியன்று நடை பெற்றது. மாவட்ட செயலா ளர் பி.சீனிவாசன் சிறப்பு ரையாற்றி உறுப்பினர் ரசீதுகளை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ரவிச்சந்திரன், கே.பி.மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.