திருநெல்வேலி, ஜூன் 17- நெல்லை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நவாப்பழம் என்று அழைக்கப்படும் நாவல் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. துவர்ப்பு சுவையுடன் கால்சியம் சத்து மிகுந்த நாவல் பழங்களை சாப்பிடு வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இயற்கையாக கிடைக்கிறது. பழங்களை சாப்பிட்டவுடன் நாக்கில் ஏற்படும் அடர் ஊதா நிறத்திற்காகவே குழந் தைகள் இதனை விரும்பி சாப்பிடுகிறார்கள்.தற்போது “மாநகர பகுதியில் நாவல் பழங்கள் விற்பனைக்கு அதிகமாக வந்து உள்ளன. இது தவிர கர்நாடக மாநிலம் மைசூ ரில் இருந்தும் மூட்டை, மூட்டை யாக நாவல் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படு கின்றது. மைசூரில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழங்கள் அளவில் பெரியதாக காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் விளையும் நாவல் பழங்கள் அளவில் சிறிது குறைவாக காணப்படும். வழக்கமாக மாம்பழ சீசன் முதலில் ஆரம்பம் ஆகும். அதனை ஒட்டி பலாப்பழ சீசன் ஆரம்பிக்கும். தற்போது நாவல் பழங்க ளின் சீசனும் ஆரம்பித்து இருப்பதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பழங்களை வாங்கி செல்கின்றனர்.பாளை மகாராஜா நகர் உழவர் சந்தை பகுதியில் கடந்த வாரம் நாவல் பழம் ரூ.320-க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது விலை குறைந்து ஒரு கிலோ ரூ.240க்கு விற்பனை யாகிறது. வரத்து நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் பழங்களின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரி வித்தனர்.